பட்டாசு தயாரிப்பில் விதிமீறலில் ஈடுபடவில்லை-  சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்

பட்டாசு தயாரிப்பில் எவ்வித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளன.

பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு கடுமையான நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. இதனிடையே தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அனுமதி கோரியது. இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு உற்பத்தியாளர்கள் கடுமையான விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக  பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!