6 காவல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

பிரதமர் மோடியின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப்பின் 6 காவல் துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாப்பில் பிரதமர் மோடியில் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த விசாரணைக்குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் பயணத்தின் போது பணியில் இருந்த பத்திண்டா மாவட்ட மூத்த கவால்துறை கண்காணிப்பாளர் மற்றும் டிஜஜி உள்ளிட்ட உயர் பதவியில் உள்ள 5 காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!