ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு

கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திராவுக்குச் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஆந்திர சுகாதாரத் துறையினர் கூறியதாவது: கடந்த 10ம் தேதி கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 39 வயது பெண், சாலை வழியாக திருப்பதி வந்துள்ளார். திருப்பதியில் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இதுவரை 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!