இந்தியாவில் பரவும் ஒமைக்ரான் வைரஸ்.. பாதிப்பு 578 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.

கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. 

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி – 142 பேர், மராட்டியத்தில் 141 பேர், தெலுங்கானாவில் 41 பேர், ராஜஸ்தானில் 43 பேர், கர்நாடகாவில் 31 பேர், குஜராத் 49 பேர், கேரளாவில் 57 பேர், ஹரியானா – 4 பேர், ஒடிசா – 4 பேர், உத்தரப்பிரதேசம் 2 பேர், தமிழ்நாடு -34 பேர் ,ஆந்திரா – 6 பேர், ஜம்மு காஷ்மீர் – 3 பேர், மேற்கு வங்காளத்தில் – 6 பேர்,, சண்டிகரில் – 3 பேர், லடாக், உத்தரகாண்ட, ஹிமாச்சல் பிரதேஷ் தலா ஒருவர் என்று ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர்களில் 151 பேர் குணமடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!