ஒமிக்ரான் பாதிப்பு 5-ஆக உயர்வு

டெல்லியில் ஒருவருக்கு “ஒமிக்ரான்” பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலும், டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 வயதான இவர் தென்னாபிரிக்காவில் இருந்து மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் டோம்பிவலி பகுதிக்கு திரும்பியதாக மகாராஷ்டிர சுகாதார துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். அவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என மகாராஷ்டிரா சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது. இன்று டெல்லியில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!