50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக, புதுச்சேரியில் 50 சதவீத அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அம்மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10ஆம் தேதி முதல் 1 ம் வகுப்பு முதல் 9 -ம் வகுப்புவரை பள்ளிகள் மூடப்பட்டது. இதனிடையே தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டும் பணிக்கு வர கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் அரசின் துறைகள் மற்றும் அரசுத்துறை தலைவர்கள் முழுமையாக பணிக்கு வரவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பணி மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நூறு சதவீதம் பணிக்கு வரவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!