எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி – 20ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை வரும் 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் மற்றும் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர்.

அமளி காரணமாக அவ்வப்போது அவை ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை அடுத்து அவை அடுத்து வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!