லக்கிம்பூர் கேரி கலவரம் தொடர்பாக எதிர்கட்சியினர் பேரணி

லக்கிம்பூர் கேரி கலவரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில், விவசாயிகள் மீது வாகனத்தை மோதவிட்ட சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதற்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவே காரணம் என்றும் விவசாயிகளுக்கு நீதி வழங்க கோரியும் எதிர்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி நாடாளுமனத்தை முடக்கி வருகின்றனர். இந்தநிலையில் இன்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர். அப்போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

 

Translate »
error: Content is protected !!