தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குமாறு தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலின் திமுக ஆட்சி பொறுப்பேற்றால் கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2 ஆயிரம் 900 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளார். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற அளவில் திமுகவின் செயல்பாடு இருப்பதாக சாடிய அவர், கரும்பு விவசாயிகளை காக்கும் நோக்கில் முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்……

Translate »
error: Content is protected !!