நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் பயணம் மேற்கொள்ள அனுமதி

முழு ஊரடங்கு நாளன்று போட்டி, நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நாளை போட்டி, நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பிய தலைமை செயலாளர் இறையன்பு, உரிய நேர்முக அழைப்பானை மற்றும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இருந்தால் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!