சிறுமிக்கு திருமணம் செய்த 8 பேர் கைது

அரியலூர் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்  அருகே தத்தனூர் குடிக்காட்டை கிராமத்தில் குழந்தை திருமணம் அரங்கேறி வருவதாக  குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 15 மற்றும் 17 வயது சிறுமிகளுக்கு பெற்றோர்களே கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு சிறுமிகளின் பெற்றோர்கள் உள்பட எட்டு பேரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள், தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!