நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்கு நான்கு நாள்களே உள்ள நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி இன்று மூத்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடைகிறது.பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இந்நிலையில், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், பிரஹலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!