மோசமான நிலையிலேயே நீடிக்கும் காற்று மாசு

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து, டெல்லிக்குள் பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் நாள் வரை கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வண்டிகளால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில், டெல்லி நகருக்குள் நவம்பர் 26-ம் நாள் வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால், கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடையானது, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!