ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் அர்ச்சகர்கள் விவரம் வெளியீடு

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளின் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை இணைதளத்தில் வெளியிட்டுள்ளது.

 

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவையில் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.  அதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.. இத்திட்டத்தின் கீழ் பயனடையும் 9860 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் பெயர் பட்டியல் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!