புதுச்சேரி: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

புதுச்சேரி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.

ஆனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்தபடியே ஆன்லைனில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Translate »
error: Content is protected !!