இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். போர் மூண்ட உக்ரைனில், பதுங்கு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள், மத்திய அரசின் உதவியை கேட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இரு மாணவிகள் பதுங்கறையில் சுவாசிக்க கூட காற்று வசதி இல்லை என வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, உடனடியாக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!