ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரயில்வே ஊழியரை மிரட்டி கட்டிப்போட்டு மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் அளிப்பவராக பணியாற்றி வருபவர் டிகா (எ) ராம் மீனா. இந்நிலையில் இன்று காலை முதல் பயணிகள் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருந்தபோது காலை 5 மணிக்கு மேலாகியும் டிக்கெட் கவுண்டர் திறக்கப்படாததால், பயணிகள் டிக்கெட் கவுண்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ரயில்வே ஊழியரான ராம் மீனா கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்ததும், டிக்கெட் கவுண்டரில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்தது.

Translate »
error: Content is protected !!