மழை பாதிப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு இரவு பகலாக சென்று கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

இதையடுத்து சென்னை செம்மஞ்சேரி சுனாமி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை உடனடியாக சீரமைக்கவும், சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதி மக்களிடம் சேத விவரம் கேட்டறிந்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Translate »
error: Content is protected !!