இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு.. 37,379 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 37,379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 43 லட்சத்து 06 ஆயிரத்து 414 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,71,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 124 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 82 ஆயிரம் 017 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,892 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் நோய்த்தொற்றில் இருந்து 766 பேர் குணமடைந்த நிலையில், 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!