கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்- OPS

கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிமெண்ட், செங்கல், கம்பி, மணல் போன்ற கட்டுமான பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும், நியாயமான விலையில் கிடைக்கும் எனவும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, கட்டுமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதாக தெரியவில்லை என்றும் மாறாக கட்டுக்கடங்காமல் விலை ஏறிக்கொண்டே செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!