ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வரும் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மொத்தம் 79,433 வேட்பாளர்களும், ஏனைய 28 மாவட்டங்களில் 1,386 வேட்பாளர்களும் களத்தில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 9 மாவட்டங்களில் உள்ள 27,002 பதவியிடங்களுக்கு பெறப்பட்ட 98,151 வேட்புமனுக்களில் 1,166 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் முழுவீச்சில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!