சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியது ஓபிஎஸ் தான்- ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: –

சசிகலா அவரை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் என்ன சொல்ல சொன்னார் என்பதை நான் முழுமையாக பார்த்து பின்னர் விளக்கம் தருகிறேன். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளோம். அதிமுகவில் சசிகலாவை சேர்க்கக் கூடாது என்று கூறியவர் ஓபிஎஸ் என கூறினார்.

Translate »
error: Content is protected !!