கழிவறைக்கு சென்ற சிறுமி – பதுங்கிய பாம்பு பாய்ந்த அதிர்ச்சி!

சவுதி அரேபியாவில் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு, சிறுநீர் கழித்து கொண்டிருந்த 6 வயது சிறுமியை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள அபா என்னும் நகரில் வசித்து வந்த 6 வயதுடைய சிறுமி தமரா அப்துல் ரகுமான், நேற்று வீட்டிலிருக்கும் கழிப்பறைக்கு சென்றாள். அப்போது, அங்கு பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு சிறுமியை கடித்துள்ளது. இதனால், அலறி துடித்த தமரா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட அவரது குடும்பத்தினர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமியோ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!