இனிப்பு கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர்…

ராசிபுரம் அருகே இனிப்பு கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர். புதுப்பாளையம் அருகே சுரேஷ் என்பவர் தீபாவளி சீட்டு நடத்தி இனிப்பு காரவகைகள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக அதே பகுதியில் உள்ள கோயில் மண்டபத்தில் 10 சமையலர்கள் இனிப்பு காரவகைகள் செய்து வந்தனர். அப்போது சமையல் உருளையில் இருந்து கேஸ் கசிவதை அறிந்த சமையலர்கள் அனைவரும் வெளியே ஓடினர். சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அனைவரும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயை அணைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!