வடசென்னை பட பானியில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட பள்ளி மாணவர்கள் – போலீசார் விசாரணை

வடசென்னை படத்தில் வரும் பிஜி.எம் போன்று பட்டாக்கத்தி வைத்து வீடியோ வெளியிட்ட நான்கு பள்ளி மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் சில இளைஞர்கள் வடசென்னை பட பி.ஜி.எம்மிற்கு பட்டாக்கத்தியுடன் நடந்து வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இந்த வீடியோவை பதிவிட்ட நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

தீவிர விசாரணையில் கத்தியுடன் வீடியோவை வெளியிட்ட நபர்கள் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் என தெரியவந்ததும், கீழ்ப்பாக்கம் போலீசார் பட்டாக்கத்தியுடன் வீடியோவை வெளியிட்ட நான்கு பள்ளி மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். லைக்குக்காக கத்தியை வைத்து வீடியோ செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக சிறுவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர்களுக்கு பட்டாக்கத்தி கிடைத்தது எப்படி? என்ற கோணத்தில் சிறுவர்களிடம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!