சிறிதரன் எம்.பி வருகை

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக வடபகுதி மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்தளத்திற்கு சிறிதரன் எம்.பி வருகையளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் குறித்த போராட்டத்திற்கு நேற்றைய தினம் இரவு(02) வருகைதந்து ஆதரவளித்திருந்தார்.

 

Translate »
error: Content is protected !!