செல்போனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

 

காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் பணி நேரங்களில் செல்போனை பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியது. அந்த வகையில் ஆவடி காவல் ஆணையர் காவல் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, ஆவடி காவல் ஆணையரகத்தில்  பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் அலுவலக நேரத்தின் போது செல்போனை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!