சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து நெல்லையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து வெற்றிலை பாக்கு வைத்து பத்தி கொளுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும் மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர் இந்த போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

Translate »
error: Content is protected !!