தீபாவளிக்கு பிறகும் கூட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்- அன்பில் மகேஷ்

தமிழக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி கட்டடங்கள், மின்சாதனங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் கட்டாயம் வர வேண்டும் என அவசியமில்லை என்றார். எனினும் தீபாவளிக்கு பின்னர் பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் வரலாம் என்றும் கூறினார்.

மேலும், மாணவர்களுக்கு ஒழுக்க நடவடிக்கைகளை கற்றுத் தரவே பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!