இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு.. 13,154 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று 9 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 22 ஆயிரத்து 040 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 7,486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 42 லட்சத்து 58 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 82,402 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 268 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 80 ஆயிரம் 860 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!