தமிழக மீனவர்கள் 9 பேர் தமிழகம் வருகை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் மத்திய மாநில அரசுகளின் முயற்சியின் காரணமாக 59 நாட்களுக்கு பின்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே, கடந்த ஜனவரி 2 ஆம் வாரத்தில் 54 மீனவர்களையும் விடுவிப்பதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், மீதமுள்ள 9 பேர் மட்டும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!