புனித ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர்

 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக பரவ தொடங்கியபோது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்தப்படாமல், சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்காக சட்டப்பேரவையை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களுக்கு கணிணி பொருத்தும் பூர்வாங்க பணிகளும் துவங்கியுள்ளன.

 

Translate »
error: Content is protected !!