தமிழ்நாடு: 4 மாவட்டங்களில் பரவிய ஒமைக்ரான்..?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:-

கொரோனாவை விட வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒமைக்ரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஒமைக்ரான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!