ஜெய்சங்கரை சந்தித்த தமிழக மாணவர்கள் மீட்பு குழு

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பான தமிழக அரசின் சிறப்புக்குழு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்தது. உக்ரைனில் தமிழக மாணவர்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளுக்காக திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா மற்றும் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இந்த சிறப்பு குழுவினர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Translate »
error: Content is protected !!