தேநீர் விடுதியில் பயங்கர தீ விபத்து

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர் விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வேலூர் பேருந்துகள் நிற்கக்கூடிய இடத்திற்கு அருகில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தேனீர் கடை செயல்பட்டு வந்தது. நேற்று இந்த கடையில் வழக்கம் போல் வடை சுடுவதற்காக அடுப்பை பற்ற வைத்த நிலையில், எரிவாயு கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Translate »
error: Content is protected !!