அன்வர் ராஜா மீதான நடவடிக்கை சரிதான்..

 

அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத்தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டார் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்வர் ராஜா மீது நடவடிக்கை இல்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள் தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டதாக கூறினார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்களால் மட்டுமே ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்ய முடியும் என தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!