பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை பாஜக அரசு ஓரங்கட்டாது

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை மத்திய பாஜக அரசு ஒருபோதும் ஓரங்கட்டாது என்று முன்னாள் மத்திய  இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் நேர்காணல் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி இன்றைய காலகட்டத்தின் நிலைமையை எண்ணி, எதிர்காலத்திற்கு ஏற்ப மிகத் தெளிவான முடிவுகளை எடுத்து வருகிறார் என்றும், அதற்கான பலன் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான இடங்களை கூட்டணி கட்சியான அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுப் பெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!