திருட்டு மின் இணைப்பு கொடுக்க மரத்தின் மீது ஏறிய வாலிபர் உடல் கருகி பலி..!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள தாக்கூர்பூர் பகுதியில் இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறி வேறு இணைப்புக்காக உயர் அழுத்த மின்சாரத்தை திருட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் உயிருடன் எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!