மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.30 புள்ளிகள் அதிகரித்து 58,135.62 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 17,303.75 புள்ளிகளாக உள்ளது. 

நிஃப்டியில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், அல்ட்ராடெக் சிமென்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன. நடப்பு ஆண்டின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை லாப நோக்கத்துடன் துவங்கியது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!