குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி பலி

பட்டம்விட்டு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் கரோத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்கேடா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஷாபீர் ஹூசைன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது பட்டம் திடீரென காணாமல் போயுள்ளது. இதை அடுத்து பட்டத்தின் நூலைப் பின்தொடர்ந்த சிறுவன் பட்டம் குளத்தில் விழுந்து கிடந்ததை கண்டுளான்.

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!