புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை செலவு ₹10 லட்சம்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு 10 லட்சம் ரூபாயை கடந்தால் அதனை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான செலவு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தால், அத்தொகையை பணமாக அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாயை சுழல் நிதியாக தமிழக அரசு விடுவித்துள்ளது. தமிழக அரசின் இந்த சலுகை அறிவிப்பு வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், போக்குவரத்துக் கழகம், இதர பொது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொருந்தாது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!