எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு வந்த முதல் பயணிகள் விமானம் தண்ணீா் பீச்சியடித்து வரவேற்பு

ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு விமான சேவை இருந்து வருகிறது.

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

கொரோனா காலத்திற்கு முன் பயணிகள் விமான சேவையை தொடங்க திட்டமிட்டப்பட்டது. ஆனால் கொரோனாவால் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வாரந்தோறும் எத்தியோப்பியாவில் இருந்து ஞாயிறு, செய்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் வந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் புறப்பட்டு செல்லும் சுற்றுலா மற்றும் வா்த்தக தளமாகவும் உள்ளது.

அங்கு உள்ளவா்களில் கணிசமாக தென் இந்தியா்கள், தமிழ்நாட்டை சோ்ந்தவா்களும் உள்ளனா்.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து முதல் விமானம் 180 பயணிகளுடன் சென்னை வந்தது.

சென்னையில் விமானம் தரையிறங்கி ஓடுபாதைக்கு வந்த போது ஓடுபாதையின் 2 புறமும் தீயணைப்பு வண்டிகள் நின்று தண்ணீரை பீச்சி அடித்து வாட்டர் சல்யூட் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதே போல் விமானத்தில் வந்த பயணிகளையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனா்.

Translate »
error: Content is protected !!