நாடு முழுவதும் 15-18 வயது சிறுவர், சிறுமியருக்கு இன்று முதல் தடுப்பூசி பணி தொடக்கம்

இந்தியா முழுவதும் உள்ள 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான பதிவு புத்தாண்டு தினத்தன்று தொடங்கியது. இதில் நேற்று இரவு 8 மணி வரை கோவின் தளத்தில் 6.35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

கோவெக்ஸ் தடுப்பூசி 15-18 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே அனுப்பி வைப்பார்கள். 2 வது டோஸ் 28 நாட்களுக்குப் பிறகு செலுத்தப்படும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தனி மையங்களை அமைக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Translate »
error: Content is protected !!