நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை

தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மக்கள் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி 87 சதவிகித பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார். மேலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!