தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைவு

கர்நாடக, கேரளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தமிழகத்தில் பாதிப்பு சற்று குறைந்த வருவது ஆறுதல் அளிப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா, ஒமிக்ரான், டெல்டா தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், 30 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார்.

Translate »
error: Content is protected !!