டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

டெல்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் 20 ஆயிரம் கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று விகிதம் சுமார் 19 சதவீதம். டெல்லியில் இதுவரை ஒமைக்ரான் தொடர்பான உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. நேற்று உயிரிழந்த 9 பேரில் நிறைய பேருக்கு இணை நோய்கள் இருந்துள்ளன.

முன்பு தினசரி பாதிப்புகள் 17 ஆயிரம் வரை பதிவாகியிருந்தன. 200க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படும். ஆனால், இம்முறை உயிரிழப்புகள் குறைவு. மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது,” என்றார்.

Translate »
error: Content is protected !!