இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 16,764 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில், டெல்லி – 450 பேர், மராட்டியத்தில் 320 பேர், கேரளாவில் 109, குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62, தமிழ்நாட்டில் 46, கர்நாடகாவில் 34, ஆந்திராவில் 16, ஹரியானாவில் 14 , ஒடிசாவில் 14, மேற்கு வங்கத்தில் 11, மத்தியப் பிரதேசத்தில் 9,  உத்தரகாண்டில் 4, சண்டிகரில் 3 பேர், ஜம்மு காஷ்மீரில் 3 பேர், உத்தரப் பிரதேசத்தில் 2 பேர், அந்தமான் நிக்கோபாரில் 1 பேர், புஞ்சாபில் 1, கோவாவில் ஒருவர், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவர், லடாக்கில் ஒருவர் மற்றும் மணிப்பூரில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!