நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.85 கோடி

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.85 கோடியாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிந்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் 419 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 43,938 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 27 லட்சத்து 15 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,18,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 295 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 45 ஆயிரம் 133 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!