மயிலின் மறைவை தாங்க முடியாத மற்றொரு மயில்

தம்முடன் ஜோடியாக வாழ்ந்து வந்த மயிலின் மறைவை தாங்க முடியாத மற்றொரு மயில், அதன் இறுதிச்சடங்கு வரை பின்தொடர்ந்த காட்சி, காண்போரின் கண்களை கலங்க செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கச்சேரா பகுதியில் 4 ஆண்டுகள் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ள இரண்டு மயில்கள், எப்போதும் இணை பிரியாத மயில்களாக இருந்துள்ளன. இந்த நிலையில் திடீரென ஒரு மயில் இறந்துள்ளது. இதனையடுத்து, அதனை அடக்கம் செய்வதற்காக இரண்டு பேர் தூக்கிச் சென்றுள்ளனர். இதனை பார்த்த துணை மயில், அதனை தாங்கிக்கொள்ள முடியாமல், இறந்த மயிலை தூக்கி சென்றவர்களின் பின்னாலேயே சென்றுள்ளது. மேலும் உயிரிழந்த மயிலின் இறுதிச் சடங்குகளில் அந்த மயில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!