இந்தியாவில் இதுவரை செலுத்திய மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 96.43 கோடி

இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு குறைந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 15,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,40,01,743 ஆக உயர்ந்துள்ளது.

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 லட்சத்து 63 ஆயிரத்து 845 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை96 கோடியே 43 லட்சத்து 79 ஆயிரத்து 212 ஆக  உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!